Search

Monday, June 16, 2014

எனது மக்களைக் காப்பாற்ற முடியாத நான், அமைச்சராக இருப்பதற்கு வெட்கப்படுகிறேன்: ரவூப் ஹக்கீம்

எனது மக்களை பாதுகாப்பதற்கு தவறிவிட்ட நான், இந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருப்பதற்கு வெட்கப்படுகின்றேன் என்று சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 

கலவரம் இடம்பெற்ற அளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளுக்கு இன்று திங்கட்கிழமை காலை சென்று நிலைமைகளை நேரில் பார்வையிட்ட பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

எனது மக்களை காப்பாற்ற முடியாத நிலையில், இந்த அரசாங்கத்தில் தான் தொடர்ந்து இருக்கவேண்டுமா? என்றும் தோன்றுகிறது என்று ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.

இதனிடையே, அரசாங்கத்தின் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதா, இல்லையா என்று சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று அல்லது நாளை தன்னுடைய முடிவை அறிவிக்கும் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment