Search

Sunday, July 27, 2014

இஸ்ரேலின் தாக்குதலில் ஷஹீத்தான சகோதரியின் வயிற்றிலிருந்து குழந்தை மீட்பு

 
இஸ்ரேல்-ஹமாஸ் போராளிகள் சண்டை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் பொதுமக்கள் குழந்தைகள் என ஏராளமானோர் பலியாகி வருகின்றனர். போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று ஐ.நா., அமெரிக்கா மற்றும் உலக நாடுகள் ஒருபுறம் வலியுறுத்தினாலும் தாக்குதல் நின்றபாடில்லை. 

இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணைகளை வீசி தாக்கி வரும் ஹமாஸ் போராளிகளை அழிக்க காசா மீது இஸ்ரேல் ராணுவம் விமான தாக்குதல் நடத்தி வருகிறது. தரைவழித் தாக்குதலும் நடந்து வருகிறது. இஸ்ரேலுக்கு எதிராக வெஸ்ட் பேங்க் பகுதியில் போராட்டம் மற்றும் வன்முறை வெடித்துள்ளது. இஸ்ரேல் போலீசாருடன் மோதலில் ஈடுபடுவதால் அவர்களிலும் பலர் கொல்லப்படுகின்றனர். 

இந்நிலையில், 18-வது நாளான இன்று 25-07-2014 இஸ்ரேல் ராணுவம் பல்வேறு பகுதிகளில் விமான தாக்குதல் நடத்தியது. ரபாவில் நடந்த தாக்குதலில் இஸ்லாமிய ஜிகாத் அமைப்பின் மூத்த தலைவர் சலாஹ் ஹசானென், அவரது 12 வயது மற்றும் 15 வயது மகன்கள் கொல்லப்பட்டனர். மத்திய காசாவில் உள்ள டெயிட் அல்-பலாஹ் நகரில் நடந்த தாக்குதலில் 23 வயது கர்ப்பிணி பலியானார். ஆனால், ஆபரேசன் செய்து அவரது வயிற்றில் உள்ள குழந்தையை டாக்டர்கள் காப்பாற்றினர். 

இதன்மூலம் காசாவில் மரண எண்ணிக்கை 832 ஆக அதிகரித்துள்ளது. ஜூலை 8-ம் தேதி முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு 5240 பேர் காயமடைந்திருப்பதாக பாலஸ்தீன சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலின் பென் குரியன் சர்வதேச விமான நிலையம் மீது 3 ஏவுகணைகளை வீசி தாக்கியதாக போராளிகள் தெரிவித்துள்ளனர்.

போராளிக்குழுவின் முக்கிய கமாண்டர், அவரது இரண்டு மகன்கள் மற்றும் ஒரு கர்ப்பிணி பெண் உள்ளிட்ட பலர் கொல்லப்பட்டனர்.

Sunday, July 20, 2014

இப்படியும் ஒரு சோகம்..!

மார்ச் மாதம் காணாமல் போன மலேசிய விமானத்தில் தனது சகோதரர் மற்றும் அவரது மனைவியை இழந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவர், உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் தனது வளர்ப்பு மகள் மற்றும் அவரது கணவரை இழந்துள்ளார்.

வாழ்க்கையில் பலருக்கும் பல வகையில் சோகங்கள் ஏற்படுவதுண்டு. ஆனால், ஒருவருக்கு ஒரே ஏர்லைன்ஸ் மூலமாக இப்படி ஒரு மோசமான நிலை ஏற்படுமா என்று கற்பனை கூட செய்ய முடியவில்லை.

ஆனால், பல நேரங்களில் நிஜம் கற்பனைகளை விட மோசமாக இருந்து விடுவதுண்டு. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கைலேன் மன் என்ற பெண்ணின் சகோதரர் ரோட் பர்ரோஸ் அவரது மனைவி மேரி பர்ரோஸ் இருவரும் கடந்த மார்ச் மாதம் காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்தவர்கள்.

அவர்களை இழந்த சோகத்தில் இருந்து கைலேன் மன் இன்னும் விடுபடாத நிலையில், வியாழக்கிழமை இரவு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசின் ஏர்லைன்ஸ் விமானத்தில் தனது வளர்ப்பு மகள் மரீ ரிஸ்க் அவரது கணவர் - ஆல்பர்ட் ஆகியோரை இழந்துள்ளார்.

இப்படி அடுத்தடுத்து குடும்ப உறுப்பினர்களை விமான விபத்தில் இழந்துள்ள கைலேன் மன் மற்றும் அவரது சகோதரர் மீளாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Friday, June 27, 2014

ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறீர்களா..?

 
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கேற்ப, பிரச்னைகளும் பின்தொடர்ந்து வந்துகொண்டேதான் உள்ளது. ஸ்மார்ட் போன் உலக மக்களிடையே மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. உலகம் உங்கள் கையில் என்ற அளவுக்கு ஸ்மார்ட் போன்களின் செயல்பாடுகள் உள்ளது. வீட்டிலிருந்த படியே அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ளும் அளவுக்கு ஸ்மார்ட் போன்கள் மக்கள் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்றாக அமைந்துவிட்டது. உலக மக்கள் தொகையில் சுமார் 70 சதவீதம் பேர் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்திவருகின்றனர். 

இந்த வகை போன்களுக்காக ஒரு லட்சத்திற்கும் அதிகமான மென்பொருள்களை பல்வேறு நிறுவனங்கள் தயாரித்துள்ளது. மக்களின் வாழ்க்கையை எளிதாக்கவே இந்த மென்பொருள்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப்படும் மென்பொருள்களில் பெரும்பாலானவை இணையதளம் மூலமாகவே இயங்கும். இதனால் இந்த மென்பொருள்களை பயன்படுத்தும் போது, வைரஸ் மற்றும் மால்வேர்(தேவையில்லா தகவல்) தொகுப்புகளால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளது.

இவ்வாறு பாதிப்பு ஏற்படும் போது நமது செல்போனில் உள்ள தகவல்களை சமூக விரோதிகள் ஹேக் செய்து எடுக்க எளிதாக மாறிவிடுகிறது. குறிப்பாக மால்வேர் புரோகிராம்களில் எளிதாக ஹேக் செய்துவிடுகின்றனர். இதனால் செல்போன்களில் நாம் பதிவு செய்து வைத்த ரகசிய தகவல்கள் அனைத்தும் எளிதாக திருடப்படுகிறது, மேலும் இணையதளத்தில் முக்கிய வேலைகளில் ஈடுபட்டிருக்கும் போது தொடர்ந்து விளம்பர செய்திகளை திரைக்கு கொண்டுவந்து தொந்தரவு கொடுக்கும். 

மேலும் முக்கிய தகவல்கள் திருடப்படுவதன் மூலம், சமூக விரோதிகள் உங்களின் அடையாளத்தை பயன்படுத்தி சட்டவிரோத செயல்களில் ஈடுபட வாய்ப்புகள் உள்ளது. உங்கள் செல்போனை ஹேக் செய்து, அதை செயலிழக்க வைக்கலாம். இவற்றை தடுக்க ஸ்மார்ட் போன்களில் உரிய ஆன்டிவைரஸ் மென்பொருளை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும், மேலும் தேவையில்லாத மென்பொருட்களை பதிவிறக்கம் செய்யாமல் இருப் பது மிகவும் நல்லது.

Tuesday, June 24, 2014

சதாம் ஹுசைன் அன்று உதிர்த்த வார்த்தைகள்… இன்று உண்மையானது!

தனக்கு தூக்குதண்டனை விதித்து தீர்ப்பளித்த, நீதிபதி ரவூப் ரசீத் அப்துல் ரஹ்மானை நோக்கி சதாம் உசேன் சொன்ன வார்த்தைகள் இதோ,
நீ… அமெரிக்காவின் பேச்சினை கேட்டு எனக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளாய். ஆனால் உன்னுடைய மரணம் நிகழப்போவது என்னுடைய மக்கள் கையால் தான் என்பதை மறந்துவிடாதே என்று கூறியுள்ளார்.

அந்த வார்த்தைகள் எத்தனை உண்மையாகி போனது இன்று. ஆம், சதாம் ஹுசைனை தூக்கிலிடும்படி தீர்ப்பு வழங்கிய நிதிபதி ரவூப் ரசீத் அப்துல் ரஹ்மானை, ஈராக்கின் ஐஎஸ்ஐஎஸ் போராளி படைகள் பிடித்து அவரை தூக்கிலிட்டனர்.

சதாமிற்கு தூக்குதண்டனை விதித்த நீதிபதிக்கு மரண தண்டனை வழங்கி ஐ.எஸ்.ஐ.எஸ் தங்களின் வெறியாட்டத்தை அரங்கேற்றியுள்ளது
ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசைனை தூக்கிலிட்ட நீதிபதிக்கு ஐ.எஸ்.எஸ். போராளிகள் மரண தண்டனையை நிறைவேற்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 2003ம் ஈராக்கில் சன்னி பிரிவை சேர்ந்த சதாம் ஹுசைன் ஆட்சிக்கு வந்தபோது அவர் ஷியா பிரிவன சிலரை கொன்றதாக குற்றம் சொல்லப்பட்டது உலக அரங்கில் ஆனால் அவருடைய ஆட்சிக்கு எதிராக நடந்த அட்கிரமகாரர்களை தான் அவர் கொன்றார்
இதனால் அவருக்கு எதிராக போர் தொடுத்த அமெரிக்காவிற்கு ஷியா பிரிவினரும் ஆதரவளித்துள்ளனர்.

எனவே சதாமின் ஆட்சி வீழ்ச்சியை நோக்கி சென்றதால், பதுங்கு குழி ஒன்றில் தலைமறைவான அவர் கைது செய்யப்பட்டதுடன், நீதிபதி ரவூப் அப்துல் ரஹ்மான் தீர்ப்பினால் கடந்த 2006ம் ஆண்டில் தூக்கிலிடப்பட்டார்.
இந்நிலையில் சதாமின் மராணத்தால் ஆத்திரம் கொண்ட ஐ.எஸ்.ஐ.எஸ் போராளிகள் தற்போது ஈராக்கின் நகரங்களை அடுத்தடுத்தாக கைபற்றி உள்ளனர்

மேலும் சதாமிற்கு தூக்குத்தண்டனை விதித்த நீதிபதி ரவூப் அப்துல் ரஹ்மானிற்கு மரண தண்டனை வழங்கி ஐ.எஸ்.ஐ.எஸ் தங்களின் வெற்றியே உறுதி செய்து உள்ளனர்

இத்தகவலை சதாம் உசேனின் உதவியாளராக இருந்த இப்ராஹிம் அல் தெளரி சமூக வலைத்தளத்தில் உறுதி செய்து உள்ளார்



முரண்பாடுகளை தோற்றுவிக்கும் பேச்சுக்களை தடை செய்யும் சட்டமூலம் விரைவில்!

இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையிலான குரோதப் பேச்சுக்களை தடைசெய்யும் சட்டமூலமொன்று விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒன்றிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். 

குரோதப் பேச்சுக்களை தடுக்கும் நோக்கில் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சு முன்வைத்த யோசனைகளை, அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையிலான அமைச்சரவை உபகுழு ஏற்கனவே அங்கீகரித்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சட்டமூலம், காழ்ப்புணர்வு பேச்சுகளுக்கு எதிரான தண்டனைக் கோவை சட்ட ஏற்பாடுகளை பொதுச்சட்டத்தின் பகுதியாக்கி, இன மோதல்களையும், அமைதியின்மையினையும் தடுப்பதற்கு முயல்கின்றது. அச்சு, இலத்திரனியல் ஊடக நிறுவனங்கள் இச்சட்டத்தின் மூலம் தணிக்கைக்கு உள்ளாகலாம். சமுதாயங்களுக்கிடையே காழ்ப்புணர்வை தூண்டியமை நிரூபிக்கப்படின் மறியல் தண்டனை அல்லது தண்டம் இல்லையேல் இரண்டும் விதிக்கப்படலாம் என்று வாசுதேவ நாணயக்கார மேலும் கூறியுள்ளார்.

Saturday, June 21, 2014

முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதியைச்சந்தித்தபோது நடந்தவை என்ன.?

கடுமையான பாதுகாப்பு நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்தராஜபக்ச பொலிஸ் மா அதிபருக்கு இன்று (21) பதுளையில் நடை பெற்ற முஸ்லிம் அமைச்சர்களுடனான சந்திப்பின் போது பணிப்புரை வழங்கியுள்ளார்.

இன்று சனிக்கிழமை பதுளையில் முஸ்லிம் அமைச்சர்களை ஜனாதிபதி மஹிந்தராஜபஷ் அவசரமாக சந்தித்தார்.

இந்த சந்திப்பில் முஸ்லிம் அமைச்சர்களான றஊப் ஹக்கீம், ஏ.எச்.எம்.பௌஸி, றிசாட் பதியுதீன், ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ், பசீர் சேகுதாவூத், பிரதியமைச்சர்களான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பைசர் முஸ்தபா ஆகியோரும் மற்றும் அமைச்சர்களான பசில் ராஜபக்ச மற்றும் டளஸ் அழகப்பெரும, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் உட்பட பொலிஸ் மா அதிபர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது முஸ்லிம் அமைச்சர்கள் ஜனாதிபதிக்கு இன்று முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் மற்றும் முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள், இன்று பானந்துறையில் இடம் பெற்ற நோலிமிட்டின் மீதான தீ வைப்புச் சம்பவம் உள்ளிட்ட பல் வேறு விடயங்களையும் மிகத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர்.

இதன் போது பல் வேறு விடங்கள் பற்றிய கலந்துரையாடலும் இடம் பெற்றுள்ளது. இறுதியில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

*அதில் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விஷேட செய்தியொன்றை கூறுதல்,
*யாராக இருந்தாலும் ஒரு இனத்தை தாக்கி பேசுவதை கண்டிப்பாக நிறுத்துதல்,
*மிக கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பொலிஸ் மா அதிபர் ஏற்படுத்தல்,
*ஒவ்வொரு வாரமும் அமைச்சர் பசில் ராஜபகசவின் தலைமையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபே ராஜபக்சவின் பங்கு பற்றுதலுடன் சந்திப்பை ஏற்படுத்தி அந்த வாரத்தில் இடம் பெற்றுள்ள விடயங்கள் பற்றி ஆராய்ந்து நடவடிக்கைகளை மேற் கொள்ளல் போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

Source: Online media

Friday, June 20, 2014

பொது பலசேன இணையத் தளம் & இலங்கை அரச இணையத் தளங்கள் மீது இணையவெளித் தாக்குதல்

நேற்றிரவிலிருந்து மீண்டும் ஒரு தடவை இலங்கை அரச இணையத்தளங்கள் மீது இணைய முடக்கத் தாக்குதல்கள் (hacking) மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதுவரை 352 இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

முன்னதாக நேற்றிரவு OP Sri Lanka என்ற ட்விட்டர் கணக்கிலிருந்து அனுப்பப்பட்ட ட்வீட் ஒன்றில் 
Extremist ‘Bodu Bala Sena’ bodubalasena.org has been TangoDown #OpSriLanka #BBS @HackerBrigade #CrimesAgainstHumanity
(இனத்துவேஷமான பொது பலசேனவின் இணையத்தளம் வீழ்த்தப்பட்டது)
என்ற விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது.
 
அதேபோல இப்போது வரை பொது பலசேனவின் இணையத்தளம் இயங்க முடியாமல் முடக்கப்பட்டுள்ளது.


இன்னும் பல அரச இணையத்தளங்களும் முடங்கியே இருக்கின்றன.
 
நாட்டு சூழ்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பிரதிபலிப்பாக வெளிநாடுகளில் இயங்கும் hackers கூட்டமைப்பின் எதிர்ப்பு வெளிப்பாடே இது என்று ட்வீட்களை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
 
பிரதமர் அலுவலகம் Primeminister.gov.lk, வெளிநாடுகள் பலவற்றுக்கான தூதரகங்கள், Sri Lanka Transport Authority, Ceylon Petroleum, the Employee’s Trust Fund website, Ports Authority, National Institute of Health, Department of Lotteries என்று பல முக்கிய தளங்கள் ஹக் செய்யப்பட்டுள்ளன.



கடந்த ஏப்ரல் மாதம் இதே போல இலங்கையின் அரச இணையத்தளங்கள் மீது துருக்கி, ஆப்கானிஸ்தான் மற்றும் இன்னும் சில மத்திய கிழக்கு மற்றும் கிழக்காசிய நாடுகளின் hackers குழுமங்கள் OP Sri Lanka - Operation Sri Lanka என்னும் பெயருடன் இணையவெளிப் போரைப் பிரகடனப்படுத்தி நூற்றுக்கணக்கான இணையத் தளங்களை முடக்கியதோடு, அந்த இணையத்தளங்களின் சகல விபரங்களையும் (login details) வெளிப்படுத்தியிருந்தார்கள்.
 
இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் எதிர்ப்புக்குரல் என்று 'கறுப்பு மே' மாதத்தை நினைவு கூர்ந்ததாக அந்த OP Sri lanka குழுமம் தெரிவித்திருந்தது.
 
எனினும் சில மணி நேரங்களின் பின்னர் அனேக தளங்கள் மீண்டும் மீட்கப்பட்டு செயற்பட வைக்கப்பட்டன. 
 
எனினும் இப்போதைய தாக்குதல் கடந்த ஞாயிறு பொது பலசேன முஸ்லிம் மக்கள் மீது கட்டவிழ்த்த சம்பவங்களின் எதிரொலி என்று கருதப்படுகிறது.
 
அதிலும் முதல் குறியாக பொது பலசேனவின் தளம் முடக்கப்பட்டதும் அதையே காட்டியிருக்கிறது.
 
Source: http://gossip.sooriyanfm.lk/101/2014/06/sri-lankan-websites-hacked