Search

Tuesday, June 24, 2014

முரண்பாடுகளை தோற்றுவிக்கும் பேச்சுக்களை தடை செய்யும் சட்டமூலம் விரைவில்!

இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையிலான குரோதப் பேச்சுக்களை தடைசெய்யும் சட்டமூலமொன்று விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒன்றிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். 

குரோதப் பேச்சுக்களை தடுக்கும் நோக்கில் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சு முன்வைத்த யோசனைகளை, அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையிலான அமைச்சரவை உபகுழு ஏற்கனவே அங்கீகரித்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சட்டமூலம், காழ்ப்புணர்வு பேச்சுகளுக்கு எதிரான தண்டனைக் கோவை சட்ட ஏற்பாடுகளை பொதுச்சட்டத்தின் பகுதியாக்கி, இன மோதல்களையும், அமைதியின்மையினையும் தடுப்பதற்கு முயல்கின்றது. அச்சு, இலத்திரனியல் ஊடக நிறுவனங்கள் இச்சட்டத்தின் மூலம் தணிக்கைக்கு உள்ளாகலாம். சமுதாயங்களுக்கிடையே காழ்ப்புணர்வை தூண்டியமை நிரூபிக்கப்படின் மறியல் தண்டனை அல்லது தண்டம் இல்லையேல் இரண்டும் விதிக்கப்படலாம் என்று வாசுதேவ நாணயக்கார மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment