Search

Sunday, July 20, 2014

இப்படியும் ஒரு சோகம்..!

மார்ச் மாதம் காணாமல் போன மலேசிய விமானத்தில் தனது சகோதரர் மற்றும் அவரது மனைவியை இழந்த ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவர், உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் தனது வளர்ப்பு மகள் மற்றும் அவரது கணவரை இழந்துள்ளார்.

வாழ்க்கையில் பலருக்கும் பல வகையில் சோகங்கள் ஏற்படுவதுண்டு. ஆனால், ஒருவருக்கு ஒரே ஏர்லைன்ஸ் மூலமாக இப்படி ஒரு மோசமான நிலை ஏற்படுமா என்று கற்பனை கூட செய்ய முடியவில்லை.

ஆனால், பல நேரங்களில் நிஜம் கற்பனைகளை விட மோசமாக இருந்து விடுவதுண்டு. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கைலேன் மன் என்ற பெண்ணின் சகோதரர் ரோட் பர்ரோஸ் அவரது மனைவி மேரி பர்ரோஸ் இருவரும் கடந்த மார்ச் மாதம் காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்தவர்கள்.

அவர்களை இழந்த சோகத்தில் இருந்து கைலேன் மன் இன்னும் விடுபடாத நிலையில், வியாழக்கிழமை இரவு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசின் ஏர்லைன்ஸ் விமானத்தில் தனது வளர்ப்பு மகள் மரீ ரிஸ்க் அவரது கணவர் - ஆல்பர்ட் ஆகியோரை இழந்துள்ளார்.

இப்படி அடுத்தடுத்து குடும்ப உறுப்பினர்களை விமான விபத்தில் இழந்துள்ள கைலேன் மன் மற்றும் அவரது சகோதரர் மீளாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

No comments:

Post a Comment